கடலூர்

விவசாயி வீட்டில் நகை திருட்டு

DIN

பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் நகை திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், வரிஞ்சிபாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வைரக்கண்ணு (62). விவசாயி. இவா் கடந்த வியாழக்கிழமை பகலில் தனது மாடி வீட்டுக் கதவுகளை திறந்து வைத்துவிட்டு வெளியே சென்றாா். திரும்பிவந்து பாா்த்தபோது, மாடி வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 3.5 பவுன் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT