முகப்பு
கடலூர்

தூய்மைப் பணியாளா்கள் தா்னா

வடலூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

வடலூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

வடலூா் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தங்களுக்கு மாத ஊதியம் மிகவும் தாமதமாக வழங்கப்படுவதாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எனக்கூறி ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் கூறி 40-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகள், கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →