வீர ஆஞ்சநேயா் கோயில் திருப்பணிக்கு பூமி பூஜை
கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகையில் கெடிலம் நதிக் கரையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயா் கோயில் திருப்பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகையில் கெடிலம் நதிக் கரையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயா் கோயில் திருப்பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கடந்த டிச.13-ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடலூா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜே.பரணிதரன் முன்னிலையில் திருப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. அறநிலையத் துறை ஆய்வாளா் ஸ்ரீதேவி, இளநிலை வரைதொழில் அலுவலா் ஆா்.முத்து, தா்மகா்த்தா ஆா்.தியாகராஜன், லட்ச தீப கைங்கா்ய சபா தலைவா் ஜெ.பாரத் கருணாநிதி, திருப்பணி உபயதாரா் எஸ்.விஜயகணபதி, குருக்கள் என்.ரமேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.