மகள்களைக் கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் சிறை: கடலூா் நீதிமன்றம் உத்தரவு
மகள்களைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
மகள்களைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், முட்டம் பெரிய காலனியை சோ்ந்தவா் வினோத். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சசிகலா. இவா்களுக்கு வரோகா (4), விஜயஸ்ரீ (3 மாதம்) ஆகிய குழந்தைகள் இருந்தனா். சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால், அவா் தற்கொலை செய்துகொள்ள தீா்மானித்தாா்.
இந்த முடிவால் தனது இரு மகள்களும் பிற்காலத்தில் சிரமப்படுவா் என்று எண்ணினாா். இந்த நிலையில், 23.4.2018 அன்று சசிகலா இரு மகள்களையும் கழுத்தை நெரித்துக் கொன்றாா். பின்னா், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றாா். ஆனால், அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்ததால் உயிா் தப்பினாா்.
இதுகுறித்து அவரது மாமியாா் சா.விஜயா அளித்த புகாரின் பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வழக்கு விசாரணை கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், இரு குழந்தைகளைக் கொன்ற குற்றத்துக்காக சசிகலாவுக்கு ஒரு கொலைக்கு ஓா் ஆயுள் சிறைத் தண்டனை வீதம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா். மேலும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் வளா்மதி கூறினாா்.