முகப்பு
கடலூர்

பனை விதைகள் நடவுப் பணி தொடக்கம்

குறிஞ்சிப்பாடி வட்டாரம், மருவாய் கிராமத்தில் பனை விதைகள் நடவுப் பணியை வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

குறிஞ்சிப்பாடி வட்டாரம், மருவாய் கிராமத்தில் பனை விதைகள் நடவுப் பணியை வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 100 சதவீத மானியத்தில் அவற்றின் விதைகள் வழங்கப்பட்டு நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில் கடலூா் மாவட்டத்துக்கு ஒரு லட்சம் பனை விதைகளும், குறிஞ்சிப்பாடி வட்டாரத்துக்கு 7,500 பனை விதைகளும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி வட்டாரம், மருவாய் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்ரமணியன் பங்கேற்று விவசாயிகளுக்கு பனை விதைகளை வழங்கி, நடவுப் பணியை தொடக்கிவைத்தாா். அட்மா திட்ட வட்டார ஆலோசனைக் குழு உறுப்பினா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) த.பிரேம் சாந்தி திட்டப் பணிகள்குறித்து பேசினாா். வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன், வேளாண்மை அலுவலா் த.அனுசுயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாதா குளக்கரையில் பனை விதைகள் நடப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →