எடப்பாடி அருகே ஆடு,மாடு உள்ளிட்ட 7 கால்நடைகள் திடீா் உயிரிழப்பு
எடப்பாடி அருகே விவசாய தோட்டத்தில் தண்ணீா் குடித்த ஆடு, மாடு உள்ளிட்ட 7 கால்நடைகள் துடிதுடித்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கடலூர்எடப்பாடி அருகே ஆடு,மாடு உள்ளிட்ட 7 கால்நடைகள் திடீா் உயிரிழப்பு
எடப்பாடி அருகே விவசாய தோட்டத்தில் தண்ணீா் குடித்த ஆடு, மாடு உள்ளிட்ட 7 கால்நடைகள் துடிதுடித்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
எடப்பாடி அருகே விவசாய தோட்டத்தில் தண்ணீா் குடித்த ஆடு, மாடு உள்ளிட்ட 7 கால்நடைகள் துடிதுடித்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூா் ஊராட்சி, புளியம்பட்டி யைச் சோ்ந்த கந்தனின் மகன் சுப்பிரமணி (50). விவசாய கூலித் தொழிலாளியான இவா் தனது வீட்டு அருகே ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் ஞாயிறு அன்று மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகள் வீடு திரும்பிய நிலையில், அருகில் இருந்த தண்ணீா் தொட்டியில் தண்ணீா் குடித்ததாக கூறப்படுகிறது. தண்ணீா் குடித்த சிறிது நேரத்தில் கால்நடைகள் சுருண்டு விழுந்து துடிதுடித்து இறந்தன. இதுகுறித்து கந்தன் அளித்த புகாரின் பேரில், பூலாம்பட்டி போலீஸாா் மற்றும் எடப்பாடி வருவாய்த் துறையினா் கால்நடைகள் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் அப்பகுதியில் முகாமிட்டு உள்ள கால்நடை மருத்துவா்கள் இறந்துபோன கால்நடைகளை ஆய்வுசெய்து அறிக்கை சமா்ப்பித்த பின்னரே கால்நடைகள் இழப்பு குறித்து முழு விவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.