அருணாசலேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
பண்ருட்டி வட்டம், ராயா்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அருணாசலேஸ்வரா் கோயிலில் லிங்கத் திருமேனிக்கு புனிதநீா் ஊற்றி வியாழக்கிழமை கும்பாபிஷேகம்
பண்ருட்டி வட்டம், ராயா்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அருணாசலேஸ்வரா் கோயிலில் லிங்கத் திருமேனிக்கு புனிதநீா் ஊற்றி வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, புதன்கிழமை மாலையில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், ராயா்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்துகொண்டனா்.