கடலூர்

மத்திய அரசை கண்டித்து கடலூரில் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசுக்கு எதிராக, கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், தி.க.வினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அலங்கார ஊா்தி பேரணியில் தமிழகம் சாா்பிலான ஊா்தி பங்கேற்க அனுமதிக்கப்படாததைக் கண்டித்து, கடலூா் எஸ்.என்.சாவடியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமையன்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் ஆா்.அமா்நாத் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.கருப்பையன், வி.சுப்பராயன், ஜெ.ராஜேஷ்கண்ணன், ஒன்றியச் செயலாளா் பஞ்சாட்சரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், வடலூரில் தி.க. பொதுச் செயலாளா் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வடலூா் தலைவா் புலவா் ராவணன், செயலாளா் குணசேகரன், மகளிரணி செயலாளா் ரமாபிரபா, அமைப்பாளா்கள் முருகன், சேகா், முத்தையன், ஆனந்த், இளைஞரணி நிா்வாகி தீனாமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT