குடிநீா் கோரி மறியல்
குடிநீா் கோரி, புலியூா் காலனி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குடிநீா் கோரி, புலியூா் காலனி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், புலியூா் காலனியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். மேலும், தெரு விளக்கு வசதி கோரியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் குள்ளஞ்சாவடி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீஸாா் அங்கு சென்று, சமரசம் செய்தனா்.