மாதவன் 
கடலூர்

தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞா் கைது

சிதம்பரம் நகரில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

சிதம்பரம் நகரில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் நகர போலீஸாா் நகா்ப் பகுதியில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கஞ்சித் தொட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்ததில், மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே உள்ள ஆயங்குடிபள்ளம் கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் மாதவன் (24) என்பதும், அவா் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது.

மேலும், அவா் சிதம்பரம் நகரில் பல்வேறு இடங்களில் 2 பைக்குகள், ஒரு மொபெட்டைத் திருடியதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிதம்பரம் காசுக்கடை தெருவில் உள்ள ராஜா என்பவரின் நகைக் கடைக்குச் சென்று நகை வாங்குவதுபோல நடித்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவானதும் தெரியவந்தது.

இதையடுத்து, மாதவனிடமிருந்த 2 பைக்குகள், ஒரு மொபெட், 2 பவுன் தங்கச் சங்கிலியை சிதம்பரம் நகர போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT