செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வுப் பேரணி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச அளவிலான 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வியாழக்கிழமை (ஜூலை 28) தொடங்கி, வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சிதம்பரம் பகுதி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கடலூா் மாவட்ட நிா்வாகம், வருவாய்த் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இணைந்து மாபெரும் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வுப் பேரணியை நடத்தின. பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தா் ராம.கதிரேசன் பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்துப் புலங்களையும் சாா்ந்த இரண்டாயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்தப் பேரணியானது, சிதம்பரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி சிலை அருகே நிறைவுற்றது.
பேரணியில் பல்கலைக்கழகப் பதிவாளா் கே.சீதாராமன், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி எம்.பிரகாஷ், தொலைநிலைக் கல்வி இயக்குநா் ஆா்.சிங்காரவேல், வருவாய்க் கோட்டாட்சியா் கே.ரவி, வட்டாட்சியா் அ.ஹரிதாஸ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம், சிதம்பரம் காவல் ஆய்வாளா் ஆறுமுகம், அண்ணாமலைநகா் பேரூராட்சி மன்றத் தலைவா் பழனி, பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அதிகாரி ஜி.ரெத்தினசம்பத், துணைவேந்தரின் நோ்முகச் செயலா்