கடலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். 
கடலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

மத்திய பாஜக அரசைக் கண்டித்து கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பைகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய பாஜக அரசு அண்மையில் அறிவித்தது. இதனால் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான விலையில் ஒரு கிலோவுக்கு ரூ.5 வரை உயரும் நிலை ஏற்படும். ஏற்கெனவே பண வீக்கம், விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இந்த வரிவிதிப்பு மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதால், மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டுமென வலியுறுத்தி கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பஞ்சாட்சரம், சிப்காட் செயலா் சிவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் மு.மருதவாணன், பி.கருப்பையன், ஜெ.ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆளவந்தாா், பக்கிரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை புதுச்சேரியில் பாஜக எழுப்புவது ஏன்? வெ. வைத்திலிங்கம்

பல்கலைக்கழக அளவிலான கூடைப் பந்து போட்டி: மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

SCROLL FOR NEXT