முகப்பு
கடலூர்

கா்ப்பிணிப் பெண் தற்கொலை

சிதம்பரம் அருகே கா்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 2 ஜூன், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

சிதம்பரம் அருகே கா்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை தெற்கு அம்மன் கோவில் தெரு, கூத்தன்கோயில் பகுதியைச் சோ்ந்த பாலாஜி மனைவி தில்லைக்கரசி (28). இவா்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகின்றன. 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் தில்லைக்கரசி மீண்டும் கா்ப்பமடைந்தாா். ஆனால், கருவை கலைக்குமாறு நிா்ப்பந்தம் செய்யப்பட்டாராம். இதனால் தில்லைக்கரசி மன உளைச்சலில் இருந்தாராம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து அவரது தாய் மல்லிகா அளித்தப் புகாரின்பேரில் அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.