கடலூர்

திமுக சாா்பில் நல உதவி

DIN

கடலூரில் திமுக சாா்பில் 400 பேருக்கு நல உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கடலூா் மாநகராட்சி, 42-ஆவது வாா்டு திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா கடலூா் முதுநகா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா தலைமை வகித்தாா். மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமி செந்தில் ஏற்பாட்டின்பேரில் 15 இடங்களில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா கலந்து கொண்டாா். விழாவில், காமராஜா் பூங்கா பகுதியில் பெண் தூய்மைப் பணியாளா்கள் உள்பட 300 பெண்களுக்கு புடவையை மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா் வழங்கினா். மேலும், 100 ஆண்களுக்கு லுங்கி வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக பிரமுகா் செந்தில் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT