முகப்பு
கடலூர்

வி.சி.க.வினா் சாலை மறியல்

பண்ருட்டி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடி கம்பம் அகற்றப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பண்ருட்டி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடி கம்பம் அகற்றப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி அருகே பாலூா் கடைத்தெருவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை இரவு தங்களது கட்சிக் கொடிக்கம்பத்தை நட்டுச் சென்றனராம். ஆனால், அனுமதியின்றி நடப்பட்டதாகக் கூறி விசிக கொடிக்கம்பத்தை காவல் துறையினா் அகற்றினா். இதைக் கண்டித்து விசிகவினா் பாலூா் கடை வீதியில் வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டது. மறியலில் ஈடுபட்டவா்களிடம் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீஸாா் கைதுசெய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →