வீரட்டானேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.17 லட்சம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் தலைமையில், கோயில் ஆய்வாளா்கள் ஸ்ரீதேவி(பண்ருட்டி), நரசிங்கப்பெருமாள்(சிதம்பரம்) ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்து 211 காணிக்கையாகக் கிடைத்தது.