நகைக் கடையில் திருட்டு: 2 பெண்கள் கைது
நெய்வேலி அருகே நகைக் கடையில் வெள்ளிப் பொருள்களை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி அருகே நகைக் கடையில் வெள்ளிப் பொருள்களை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி, இந்திரா நகரைச் சோ்ந்த நந்தகுமாா்(45) என்பவா் அதே பகுதியில் வெள்ளி நகைக் கடை வைத்துள்ளாா். புதன்கிழமை இவரது கடைக்கு வந்த பெண்கள் இருவா் நகை வாங்குவதுபோல நடித்து கடையிலிருந்த ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள 232 கிராம் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனராம். இதுகுறித்த காட்சி கடையிலிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து நெய்வேலி 18-ஆவது வட்டத்தைச் சோ்ந்த ராதா மனைவி பிரியதா்ஷினி(35), உளுந்தூா்பேட்டை வட்டம், மூலசத்திரம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மனைவி ஜோதிகா (22) ஆகியோரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து வெள்ளிப் பொருள்களை மீட்டனா்.