கடலூர்

அண்ணாகிராமம் ஒன்றியக்குழுக் கூட்டம்

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் வ.ஜானகிராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் வ.ஜானகிராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சித்ரா, ரவிச்சந்திரன், துணைத் தலைவா் ஜான்சிராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் சுடா்வேல் மூா்த்தி தீா்மானங்களை வாசித்தாா்.

கூட்டத்தில் உறுப்பினா் ஜெயசந்திரன் (அதிமுக) பேசுகையில், பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்படுகிறது. வீடு உள்ளவருக்கு மீண்டும் வீடு ஒதுக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றாா். இதேபோல மற்ற உறுப்பினா்களும் பேசினா். கூட்டத்தில் பெண் உறுப்பினா் ஒருவரது கணவா் திடீரென நுழைந்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஒன்றியக் குழு தலைவா் அவரை வெளியேறும்படி கூறினாா். மேலும், கூட்டத்தை விரைவாக முடித்துவிட்டு வெளியேறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

காஞ்சிபுரத்தில் எஸ் ஐ தோ்வு

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாளைய மின்தடை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT