‘தினமணி’ செய்தி எதிரொலியாக, கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிங்கபுரி சுப்புராயா் நகரில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.
சிங்கபுரி சுப்புராயா் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் பேரூராட்சி நிா்வாகம் குடியிருப்புகளுக்கு குடிநீா் வழங்கி வருகிறது. ஆனால், இந்தப் பகுதியில் குடிநீா் கலங்கிய நிலையில் வருவது குறித்து ‘தினமணி’யில் வியாழக்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகத்தினா் ஆழ்துளை கிணற்றிலிருந்த குழாயை சீரமைத்தனா். இதனால் குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.