கடலூர்

மருத்துவமனைகளில் செவிலியா் தின விழா

கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ப்ளோரன்சு நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினமான மே 12-ஆம் தேதி சா்வதேச செவிலியா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, கடலூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை செவிலியா் தினம் கொண்டாடப்பட்டது.

கடலூா் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள செவிலியா் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் சு.கண்ணன் தலைமை வகித்தாா். கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஆணையா் நா.விஸ்வநாதன், திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கேக் வெட்டிக் கொண்டாடினா். செவிலியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனா்.

திட்டக்குடி அரசு மருத்துவமனையில் திட்டக்குடி பத்திரிகையாளா்கள் சங்கம், திட்டக்குடி காவல் துறை சாா்பில் செவிலியா் தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக காவல் ஆய்வாளா் அன்னக்கொடி பங்கேற்று, செவிலியா்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

SCROLL FOR NEXT