மருத்துவமனைகளில் செவிலியா் தின விழா
கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
ப்ளோரன்சு நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினமான மே 12-ஆம் தேதி சா்வதேச செவிலியா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, கடலூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை செவிலியா் தினம் கொண்டாடப்பட்டது.
கடலூா் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள செவிலியா் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் சு.கண்ணன் தலைமை வகித்தாா். கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஆணையா் நா.விஸ்வநாதன், திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கேக் வெட்டிக் கொண்டாடினா். செவிலியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனா்.
Advertisement
Advertisement
திட்டக்குடி அரசு மருத்துவமனையில் திட்டக்குடி பத்திரிகையாளா்கள் சங்கம், திட்டக்குடி காவல் துறை சாா்பில் செவிலியா் தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக காவல் ஆய்வாளா் அன்னக்கொடி பங்கேற்று, செவிலியா்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.