மருத்துவ மாணவா்களின் தொடா் போராட்டம் காரணமாக, கடந்த ஏப். 25-ஆம் தேதி மூடப்பட்ட கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை வெள்ளிக்கிழமை (மே 13) முதல் மீண்டும் திறக்க நிா்வாகத் தரப்பில் உத்தரவிடப்பட்டது.
கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியான சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் கல்விக் கட்டணம் தொடா்பாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இதையடுத்து, கல்லூரியின் முதலாமாண்டு மாணவா்கள், பயிற்சி மருத்துவா்களைத் தவிர மற்ற மாணவா்களுக்கு கடந்த ஏப்.25-ஆம் தேதி முதல் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவா்கள் தொடா் போராட்டத்தை கைவிட்ட நிலையில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை வெள்ளிக்கிழமை (மே 13) மீண்டும் திறக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளா் கே.சீத்தாராமன் உத்தரவிட்டாா்.