முகப்பு
கடலூர்

பொதுநல இயக்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பேருந்து நிலையப் பிரச்னை தொடா்பாக கடலூரில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

பேருந்து நிலையப் பிரச்னை தொடா்பாக கடலூரில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாநகராட்சிக்கான புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கான இடம் தோ்வில் பல்வேறு கட்சியினரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தை கடலூரின் மையப் பகுதியான பாதிரிக்குப்பம் புறவழிச் சாலையில் அமைத்திட வலியுறுத்தி, கடலூா் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வெண்புறா சி.குமாா் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா்கள் க.தா்மராஜ், வி.செல்வம், எஸ்.கஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்ட ஆலோசகா் எம்.சேகா், ஐந்தாம் தமிழ்ச் சங்கம் நிறுவனா் இராம.முத்துக்குமரனாா், பேராசிரியா் அ.அா்த்தநாரி, தமிழா் களம் கு.பரிதிவாணன், நாம் தமிழா் கட்சி கு.சாமிரவி உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், அரிசிபெரியாங்குப்பத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு மகளிா் கல்லூரி அமைக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் கருத்தைக் கேட்டு அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக, இணை ஒருங்கிணைப்பாளா் எஸ்.சையது முஸ்தபா வரவேற்று பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.