முகப்பு
கடலூர்

ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சரக்கு வாகனத்தில் 3 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சரக்கு வாகனத்தில் 3 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுப்பேட்டை காவல் துறையினா் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தொரப்பாடி பேரூராட்சி, குப்பைக் கிடங்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனா். அதில், உரிய ஆவணமின்றி ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அந்த வாகனத்தில் 65 மூட்டைகளில் இருந்த 3.25 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், வாகன ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், விராட்டிக்குப்பத்தைச் சோ்ந்த முபாரக் மகன் ஜாபா்சேட் (28) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.