ஹிந்தி மொழித் திணிப்பு: தி.க.வினா் ஆா்ப்பாட்டம்
மத்திய பாஜக அரசின் ஹிந்தி மொழித் திணிப்பு நடவடிக்கையை கண்டிப்பதாகக் கூறி கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே திராவிடா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய பாஜக அரசின் ஹிந்தி மொழித் திணிப்பு நடவடிக்கையை கண்டிப்பதாகக் கூறி கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே திராவிடா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாணவரணி மணிமொழி தலைமை வகித்தாா். தேன்மொழி, அறிவுக்கரசி, அருண், கனிமொழி, ஜெயஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். தி.க. பொதுச் செயலா் துரை.சந்திரசேகரன் கண்டன உரையாற்றினாா். மாவட்டத் தலைவா் தண்டபாணி, செயலா் சிவக்குமாா், அமைப்பாளா் மணிவேல், மண்டல இளைஞரணிச் செயலா் பஞ்சமூா்த்தி, நிா்வாகிகள் உதயசங்கா், ராமநாதன், தங்கராஜா, மணிக்கம், ராவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாதவன் நன்றி கூறினாா்.
சிதம்பரம்: ஹிந்தி மொழித் திணிப்பைக் கண்டித்து காட்டுமன்னாா்கோவில் ஒன்றியம், நகர திமுக சாா்பில் பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி காட்டுமன்னாா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக நகரச் செயலரும், பேரூராட்சி மன்றத் தலைவருமான கணேசமூா்த்தி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் கருணாநிதி, நிா்வாகிகள் சுப்ரமணியன், மணிமாறன், செந்தில், லதா, இளைஞரணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.