முகப்பு
கிரிக்கெட்

"2024' அனுபவ ஆட்டத்தின் வெற்றி; "2026' இளமை அதிரடியின் வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2026-இல் கிடைத்த வெற்றி இளம் அதிரடி வீரர்களின் இந்திய அணிக்கானது என்று இந்திய கேப்டன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.

Updated On : 17 மார்ச், 2026 at 10:12 PM
பகிர்:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், 2024-இல் கிடைத்த வெற்றி அனுபவமிக்க வீரர்களின் இந்திய அணிக்கானது என்றும், 2026-இல் கிடைத்த வெற்றி இளம் அதிரடி வீரர்களின் இந்திய அணிக்கானது என்றும் இந்திய கேப்டன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.

அண்மையில், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனது. கோப்பையைத் தக்கவைத்த முதல் அணி, சொந்த மண்ணில் கோப்பை வென்ற முதல் அணி, 3 முறை கோப்பை வென்ற ஒரே அணி ஆகிய சாதனைகளை இந்தியா படைத்தது.

இந்நிலையில், அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "பிடிஐ' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

2024, 2026-இல் டி20 உலகக் கோப்பை வென்ற இரு இந்திய அணிகளுக்குமே சிறு வித்தியாசம் உள்ளது. 2024-இல் கோப்பை வென்றது, அனுபவமிக்க வீரர்கள் அடங்கிய இந்திய அணியாகும். இந்த முறை கோப்பை வென்றிருப்பது, இளம் அதிரடி வீரர்கள் இருக்கும் இந்திய அணியாகும்.

அப்போது அணியில் இருந்த வீரர்கள் தங்களுக்கான பணி என்ன என்பதை மிகத் தெளிவாக அறிந்திருந்தனர். அனுபவம் அவர்களுக்கு அந்தத் திறமையை அளித்திருந்தது. இந்த முறை இந்திய அணியில் அனுபவ வீரர்கள் குறைவாக இருந்தாலும், உத்வேகமிக்க, தீவிரமான வீரர்கள் இருந்தது சாதகமாகும்.

அனைவருமே 25-27 வயதுடையவர்கள். சொந்த மண்ணில் உலகக் கோப்பை வெல்லும் உணர்வு எப்படி இருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியிருந்தது. சொந்த மண்ணில் விளையாடும்போது எதிர்பார்ப்புகளால் ஏற்படும் அழுத்தத்தை உணர்ந்து விளையாட வேண்டியிருந்தது. அது தவிர, திறமை அடிப்படையில் இரு அணிகளிலுமே பெரிதாக வித்தியாசம் இருக்கவில்லை.

2024-இல் அணியில் ஒரு வீரராக இருந்தபோதும், 2026-இல் அணியின் கேப்டனாக இருக்கும்போதும் எனது உணர்வுகள் ஒரே மாதிரியாகத் தான் இருந்தன. சொந்த மண்ணில் விளையாடுவதால், கோப்பை வென்றாக வேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருந்தது என்றார் சூர்யகுமார்.

முழு கட்டுரையைப் படிக்க →