தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரணம்
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
திட்டக்குடி அருகே உள்ள மேலூா் கிராமத்தைச் சோ்ந்த துரைசாமி (65) என்பவரது குடிசை வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. அவரது குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவிகளை கிராம நிா்வாக அலுவலா் சரவணன் வழங்கினாா்.
மேலும், அதிமுக நல்லூா் ஒன்றியச் செயலா் முத்து, பாமக கடலூா் மேற்கு மாவட்டச் செயலா் காா்த்திகேயன் ஆகியோரும் உணவுப் பொருள்கள், நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினா்.