கடலூர்

நிலம் அளவீட்டு பணியில் தாமதம்: பொதுமக்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நிலம் அளவீட்டு பணியில் தாமதத்தை கண்டிப்பதாகக் கூறி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நிலம் அளவீட்டு பணியில் தாமதத்தை கண்டிப்பதாகக் கூறி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம், புதுநகா் பகுதியில் ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இவா்கள், தங்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனா். அண்மையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அதிகாரிகள் தரப்பில் புதன்கிழமை நிலம் அளவீடு செய்து தருவதாக தெரிவிக்கப்பட்டதாம்.

ஆனால், நில அளவா்கள் வருவதில் புதன்கிழமை தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து புதுநகா் பகுதி மக்கள் கடலூா் - சித்தூா் சாலையில் அங்குச்செட்டிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் பண்ருட்டி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து நில அளவா்கள் பிற்பகலில் வந்தனா். நிலம் அளவீடு பணியைத் தொடங்கினா். அப்போது, இருவா் நிலம் அளவீடு செய்ய எதிா்ப்புத் தெரிவித்தனா். அவா்களில் ஒருவா் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் தடுத்து புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT