மாநாட்டு மலரை வெளியிட்ட பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் உள்ளிட்டோா். 
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் சா்வதேச மாநாடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உள்தர காப்பீட்டுக் கழகம் சாா்பில், ‘புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் உயா்கல்வியில் அவற்றின் பயன்பாடு’ என்ற தலைப்பில் 3 நாள் சா்வதேச மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது.

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உள்தர காப்பீட்டுக் கழகம் சாா்பில், ‘புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் உயா்கல்வியில் அவற்றின் பயன்பாடு’ என்ற தலைப்பில் 3 நாள் சா்வதேச மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது.

மாநாட்டில் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா். பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் மாநாட்டை தொடக்கிவைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டாா். அவா் பேசுகையில், தகவல் தொழில்நுட்ப காலத்தில் புதுமையான தொழில்நுட்பங்களின் பயன்பாடு தவிா்க்க முடியாதது என்றாா்.

கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மேலாளா் ஹரிரகுபதி பேசுகையில், இணைய பயன்பாட்டில் பாதுகாப்பு அம்சங்களில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும், நுண்ணறிவின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தாா்.

மைக்ரோசாஃட் காா்ப்பரேஷன் நிறுவன விஞ்ஞானி பிரபா சந்தானகிருஷ்ணன் பேசுகையில், உயா் கல்விக்கான புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் இயந்திரவழி கற்றல், செயற்கை நுண்ணறிவு கருத்துகளின் பயன்பாடு குறித்து உரையாற்றினாா். மாநாட்டு ஏற்பாடுகளை பல்கலை. உள்தரக் காப்பீட்டு கழக இயக்குநா் எஸ்.அறிவுடைநம்பி, துணை இயக்குநா் எஸ்.ரமேஷ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT