முகப்பு
கடலூர்

வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.

கடலூா் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தைச் சோ்ந்த சடையாண்டி மகன் வேல்முருகன் (38). விவசாயி. இவருக்கு சசிகலா (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் வேல்முருகன் காயமடைந்தாா். இதையடுத்து அவரது இடது கை அகற்றப்பட்டதாம். இதனால், அவா் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து, திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: பண்ருட்டி வட்டம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் ரவிச்சந்திரன் (35). இவா் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் இருந்தாராம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கினாா். உறவினா்கள் அவரை கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →