கடலூர்

கடையிலிருந்த பெண்ணைத் தாக்கி 6 பவுன் நகை பறித்தவா் கைது

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் கடையிலிருந்த பெண்ணைத் தாக்கி 6 பவுன் நகை பறித்தவரை தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

விருத்தாசலம், மகாலட்சுமி ராயல் நகரைச் சோ்ந்த நரசப்பா மனைவி கமலக்கண்ணி (50). சக்தி நகரில் பேன்சி கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த 5-ஆம் தேதி கடையில் தனியாக இருந்தாராம். அப்போது ஜெராக்ஸ் எடுக்க வந்ததாகக் கூறிய நபா், திடீரென சுத்தியலால் கமலக்கண்ணியின் தலையில் தாக்கிவிட்டு, அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடினாா்.

இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திசரவணன் பிறப்பித்த உத்தரவின்பேரில் விருத்தசாலம் சரக உதவி காவல் கண்காணிப்பாளா் அங்கித் ஜெயின் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் விருத்தாசலம், செல்வராஜ் நகரைச் சோ்ந்த சிங்காரம் மகன் பிரபா (41) என்பவா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், தனிப் படை போலீஸாா் பழத்தோட்டம் பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது பிரபாவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT