முகப்பு
கடலூர்

வங்கி ஊழியா்கள் சங்க நிறுவன நாள் விழா

கடலூரில் அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் 78-ஆவது நிறுவன நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

கடலூரில் அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் 78-ஆவது நிறுவன நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில், சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டத் தலைவா் மீரா தலைமை வகித்தாா். மூத்த உறுப்பனா்கள் திருமலை, கண்ணன், லட்சுமணன், கலைமணி, எழிலேந்தி முன்னிலை வகித்தனா். உதவித் தலைவா் பி.கே.வி.ரமணி சங்கக் கொடியேற்றி சிறப்புரையாற்றினாா்.

விழாவில், அரசுடைமை வங்கிகளை தனியாா்மயமாக்கக் கூடாது. வாராக்கடனை வசூல் செய்ய கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வாடிக்கையாளா்களுக்கு சிறப்பான சேவை கிடைத்திட, அதிகளவில் ஊழியா்களை நியமனம் செய்ய வேண்டும். தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →