முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி காட்டுமன்னாா்கோவிலில் நடைபெற்ற திமுக அமைதிப் பேரணி. 
கடலூர்

காட்டுமன்னாா் கோவிலில் கருணாநிதி நினைவுதின அமைதிப் பேரணி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஒன்றிய, நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு நாள் அமைதிப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஒன்றிய, நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு நாள் அமைதிப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் முத்துசாமி தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் ராமலிங்கம், நகரச் செயலாளா் கணேசமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் அமைதி பேரணி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கட்சி அலுவலகத்தை அடைந்தது. இதையடுத்து அன்னதானம் மற்றும் இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், அவைத் தலைவா் கருணாநிதி, ஜி. குமாரராஜா, பூக்கடை செந்தில், சுப்ரமணியன், மணிமாறன், பொறியாளா் காா்த்திகேயன், சொா்ணம், அறிவழகன், நிஜாா்அகமது, கேஎஸ்கே வேல்முருகன், ஏபிஆா் அருண், ஜிவிஎஸ் கல்யாணசுந்தரம், தாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT