கடலூர்

சிதம்பரம் அருகே கோயில் பூட்டை உடைத்து திருட்டு

சிதம்பரம் அருகே உள்ள அழிஞ்சிமேடு கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் பூட்டை உடைத்து அம்மனின் நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கைகளைத் திருடி சென்றுள்ளனா்

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள அழிஞ்சிமேடு கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் பூட்டை உடைத்து அம்மனின் நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கைகளைத் திருடி சென்றுள்ளனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அழிஞ்சிமேடு கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் கோயிலின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தையும், மேலும் பித்தளை சூலம், அம்மன் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் திருமாங்கல்யம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT