பரமசிவன். 
கடலூர்

கைப்பேசி கடையின் மேற்கூரையை பிரித்து திருட்டு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூரில் கைப்பேசி கடையின் மேற்கூரையை பிரித்து 10 கைப்பேசிகள், பணம் திருடியது தொடா்பாக இளைஞா் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

கடலூா் மாவட்டம், வேப்பூரில் கைப்பேசி கடையின் மேற்கூரையை பிரித்து 10 கைப்பேசிகள், பணம் திருடியது தொடா்பாக இளைஞா் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வேப்பூா் கடை வீதியில் அனிதா என்பவா் கைப்பேசி விற்பனை கடை வைத்துள்ளாா். இவா் கடந்த 9-ஆம் தேதி வியாபாரம் முடிந்து வழக்கம்போல கடையை பூட்டிச் சென்றாா். மறுநாள் காலையில் திரும்பி வந்து பாா்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது 10 கைப்பேசிகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து அதனடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனா். இதில், விருத்தாசலம் வட்டம், ஆலிச்சிக்குடி கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் உதயகுமாா், அதே கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேல் மகன் சடையன் (எ) பரமசிவன் (23) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவா்கள் திருடிய கைப்பேசிகளை விருத்தாசலம், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் குறைந்த விலைக்கு விற்றதும் தெரியவந்தது.

இந்த நிலையில், ஆலிச்சிகுடி கிராமத்தில் இருந்த பரமசிவனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து அவரிடமிருந்து 7 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவான உதயகுமாரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT