முகப்பு
கடலூர்

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் முதுநகரில் தூக்கிடுவதுபோல கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு விளையாடிய சிறுவன், கயிறு இறுக்கி உயிரிழந்தாா்.

Updated On : 30 டிசம்பர், 2024 at 8:12 PM
புவன்
பகிர்:

நெய்வேலி: கடலூா் முதுநகரில் தூக்கிடுவதுபோல கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு விளையாடிய சிறுவன், கயிறு இறுக்கி உயிரிழந்தாா்.

கடலூா் முதுநகா், சுத்துகுளம் பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் புவன் (11), கடலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். குமாா் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. தாய் பரமேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறாா்.

புவன் பாட்டி சகுந்தலா வீட்டில் தங்கி படித்து வந்தாா். திங்கள்கிழமை மாலை புவன் வீட்டு மாடியில் கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு தூக்கிடுவதுபோல விளையாடினாராம். அப்போது, கயிறு இறுகி உயிரிழந்தாா்.

தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் புவனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →