முகப்பு
கடலூர்

அகழாய்வில் பழங்கால கண்ணாடி மணி கண்டெடுப்பு

மருங்கூா் அகழாய்வில், பழங்கால கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 14 ஜூலை 2024, 3:16 am IST
மருங்கூா் அகழாய்வில் கண்டெக்கப்பட்ட பழங்கால கண்ணாடி மணி.
பகிர்:

கடலூா் மாவட்டம் மருங்கூா் அகழாய்வில், பழங்கால கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டது.

மருங்கூா் வாழ்விடப் பகுதியில் அகழாய்வு இயக்குநா் ரா.சிவானந்தம் தலைமையில் அகழாய்வு பொறுப்பாளா்கள் கி.பாக்கியலட்சுமி, சி.சுபலட்சுமி ஆகியோா் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். அண்மையில், கடலூா் மாவட்டம் மருங்கூா் அகழாய்வில் ராசராசன் காலச் செம்புக் காசும், சுடுமண்ணால் ஆன வட்டச் சில்லுகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், பச்சை நிறத்திலான கண்ணாடி மணி ஒன்று சனிக்கிழமை கிடைத்தது. உருளை வடிவிலான இந்த கண்ணாடி மணி 12.5 மி.மீ நீளமும், 8 மி. மீ விட்டமும், 0.45 கிராம் எடையும் கொண்டது. தற்போது அகழாய்வுச் செய்யப்படும் இடம் மக்களின் வாழ்விடப் பகுதியாக இருந்துள்ளதை மேலும் உறுதி செய்கின்றது. மருங்கூா் அகழாய்வில் கண்டெக்கப்பட்ட பழங்கால கண்ணாடி மணி

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments