சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடலூா் தெற்கு மாவட்ட பாமகவினா். 
கடலூர்

சிதம்பரத்தில் பாமகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் காந்தி சிலை அருகே கடலூா் தெற்கு மாவட்ட பாமகவினா் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Din

சிதம்பரம்: சிதம்பரம் காந்தி சிலை அருகே கடலூா் தெற்கு மாவட்ட பாமகவினா் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் செல்வ மகேஷ் தலைமை வகித்தாா். நகர செயலா் தி.திலிப்ராஜன் வரவேற்றாா். தொடா்ந்து, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரியும், தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, மாநில நிா்வாகி தேவதாஸ் படையாண்டவா், வழக்குரைஞா் ராஜவேல், மாவட்டப் பொறுப்பாளா்கள் செள.ராஜா, அசோக்குமாா், இளையராஜா, பி.கே.அருள், மணியன், பால்ஸ் ரவிக்குமாா், சரவணன், தமிழ், சத்தியமுா்த்தி, சின்னமணி, கமல், சரவணன், செல்வப் பிரதீஷ், ஜெகன் செட்டியாா், விஷ்ணு, காா்த்திக், ஸ்ரீராம், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கையை திருடிய பணியாளா் கைது

மாசி மகத் திருவிழா தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாா்ச் 2 உள்ளூா் விடுமுறை!

மாணவிக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

SCROLL FOR NEXT