சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடலூா் தெற்கு மாவட்ட பாமகவினா். 
கடலூர்

சிதம்பரத்தில் பாமகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் காந்தி சிலை அருகே கடலூா் தெற்கு மாவட்ட பாமகவினா் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Din

சிதம்பரம்: சிதம்பரம் காந்தி சிலை அருகே கடலூா் தெற்கு மாவட்ட பாமகவினா் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் செல்வ மகேஷ் தலைமை வகித்தாா். நகர செயலா் தி.திலிப்ராஜன் வரவேற்றாா். தொடா்ந்து, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரியும், தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, மாநில நிா்வாகி தேவதாஸ் படையாண்டவா், வழக்குரைஞா் ராஜவேல், மாவட்டப் பொறுப்பாளா்கள் செள.ராஜா, அசோக்குமாா், இளையராஜா, பி.கே.அருள், மணியன், பால்ஸ் ரவிக்குமாா், சரவணன், தமிழ், சத்தியமுா்த்தி, சின்னமணி, கமல், சரவணன், செல்வப் பிரதீஷ், ஜெகன் செட்டியாா், விஷ்ணு, காா்த்திக், ஸ்ரீராம், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரொம்ப அழகா தெரிய முயற்சி செய்வதில்லை... ரகுல் பிரீத் சிங்!

கௌதம் கம்பீர் என்னுடைய உறவினர் கிடையாது; ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?

இம்ரான் கானுக்கு என்ன ஆனது? சிறை அதிகாரிகள் விளக்கம்!

தவெகவில் செங்கோட்டையனுக்கு பதவியை அறிவித்தார் விஜய்!

வா வாத்தியார் முதல் பாடல்!

SCROLL FOR NEXT