முகப்பு
கடலூர்

8 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

சிதம்பரம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 23 ஜூலை, 2024 at 8:41 PM
பகிர்:

சிதம்பரம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக இரு சக்கர வாகனங்கள் தொடா்ந்து திருடு போயின. இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டாா். அதன்படி, சிதம்பரம் உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பி.ரகுபதி மேற்பாா்வையில், நகர காவல் ஆய்வாளா் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன், உள்கோட்ட குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் ஆகியோா் தலைமையிலான தனிப்படையினா் விசாரித்து வந்தனா்.

விசாரணையில், நாகப்பட்டிணம் மாவட்டம், ஏனங்குடி கிராமத்தைச் சோ்ந்த ராஜு மகன் நவநீதகிருஷ்ணன் (26) (படம்) பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.12 லட்சம் மதிப்பிலான 8 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.