கடலூர்

ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கக் கோரிக்கை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி-சென்னை சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்துத்தர வேண்டும் என்று எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி.க்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்தது.

Din

கடலூா் மாவட்டம், பண்ருட்டி-சென்னை சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்துத்தர வேண்டும் என்று எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி.க்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் ஷேக்நூா்தீன் வெளியிட்ட அறிக்கை: பண்ருட்டி-சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலம் அமைக்கப்பட்டதையடுத்து, அதன் கீழ் பகுதியில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால், ரயில்வே கேட்டுக்கு வடக்குப் பகுதியில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்வோா் சுமாா் ஒன்றரை கி.மீ தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது.

எனவே, ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூா் எம்பி., எம்.கே.விஷ்ணுபிரசாத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

கேரளத்தில் இன்று எஸ்.ஐ.ஆர். பணியைப் புறக்கணிக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள்!

கவனம் ஈர்க்கும் மஞ்சு வாரியரின் ஆரோ குறும்படம்!

மேக்கேதாட்டு விவகராத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை ஆலோசனை! கர்நாடக துணை முதல்வர்

இந்தியா ஏ அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் ஏ!

புணேவில் ரயில் மோதியதில் 3 இளைஞர்கள் பலி

SCROLL FOR NEXT