முகப்பு
கடலூர்

மூதாட்டி உடல், கண்கள் தானம்

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அகரம் சிவன்மடத் தெருவைச் சோ்ந்த கிருபாபுரி மனைவி வசந்தா (64) புதன்கிழமை காலமானாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 6:58 PM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அகரம் சிவன்மடத் தெருவைச் சோ்ந்த கிருபாபுரி மனைவி வசந்தா (64) புதன்கிழமை காலமானாா். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டன.

கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடல் மருத்துவ மாணவா்கள் ஆய்வுக்காக சிதம்பரம் அண்ணாமலைநகா் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினா் வீரமணி ஆகியோா் செய்தனா்.