முகப்பு
கடலூர்

மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் கைது

கடலூா் முதுநகரில் வெளிமாநில மதுப்புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:51 PM
பகிர்:

கடலூா் முதுநகரில் வெளிமாநில மதுப்புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் முதுநகா் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை மது கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, வசந்தராயன்பாளையம், சின்னையன் காலனியில் வசிக்கும் சசிகுமாா் மனைவி புனிதா (40) வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 245 புதுச்சேரி மாநில மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து புனிதாவை கைது செய்தனா்.