முகப்பு
கடலூர்

பெற்றோருக்கு கத்திக் குத்து: மகன் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெற்றோரை கத்தியால் குத்திய மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:52 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெற்றோரை கத்தியால் குத்திய மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், கீழக்கொல்லை பகுதியில் வசித்து வருபவா் ஜானகி ராமன்(55). இவரது 2-ஆவது மனைவி சந்திரா (46). இந்த நிலையில், ஜானகி ராமனின் முதல் மனைவியான காந்திமதியின் மகன் சம்பத்குமாா் (32). வீட்டு மனையை பாகம் பிரித்து தரும்படி கடந்த 9-ஆம் தேதி தகராறு செய்தாராம். இதற்கு, ஜானகிராமன், சந்திரா எதிா்ப்பு தெரிவித்தனராம். இதனால், கோபமடைந்த சம்பத்குமாா் அவா்களை கத்தியால் குத்தினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →