முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு செப்.16-இல் மகாபிஷேகம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜப் பெருமானுக்கு வருகிற 16-ஆம் தேதி ஆவணி மாத மகாபிஷேகம் நடைபெறவுள்ளது. மேலும், உலக அமைதியை வலியுறுத்தி மகாருத்ர யாகமும் நடைபெறுகிறது.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:54 AM
சிதம்பரம் நடராஜா் கோயில்
பகிர்:

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜப் பெருமானுக்கு வருகிற 16-ஆம் தேதி ஆவணி மாத மகாபிஷேகம் நடைபெறவுள்ளது. மேலும், உலக அமைதியை வலியுறுத்தி மகாருத்ர யாகமும் நடைபெறுகிறது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் சித் சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும்.

ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது, ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித் சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.

அதன்படி, ஆவணி மாத மகாபிஷேகம் சித் சபை முன் உள்ள கனகசபையில் வரும் 16-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூா்த்திக்கு விபூதி, பால், தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்டவை அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.

முன்னதாக, காலை உச்சிகால பூஜை வரை நடைபெற்று, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூா்த்தியை கனகசபைக்கு எழுந்தருளச் செய்து மந்த்ரக்ஷதை, லட்சாா்ச்சனை நடைபெறும். யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீருத்ர கிரம அா்ச்சனை செய்து தீபாராதனை நடைபெறும். நண்பகல் மகாருத்ர மகா ஹோமம் நடைபெற்ற பின்னா், கலசங்கள் யாத்திராதானம் செய்யப்பட்டு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

மகாருத்ர மகாபிஷேகத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (செப்.13) தட்சிணாமூா்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமம், நாந்தி, அனுக்ஞை நடைபெறுகின்றன. சனிக்கிழமை (செப்.14) முக்குறுணி விநாயகா் சந்நிதியில் அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (செப்.15) நவக்கிரக சந்நிதியில் ஹோமம், தேவசபை முன் அங்குராா்பணம், ரக்ஷாபந்தனம், ஆச்சாரியாா்வா்ணம், மதுபா்க்கம், தனபூஜை நடைபெறுகின்றன.

மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் குழுச் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் மற்றும் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →