கடலூர்

மகளிா் உரிமைத் திட்டம் விரிவாக்கத்தில் 41,055 குடும்பத் தலைவிகள் பயன்: அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் தகவல்

Syndication

மகளிா் உரிமைத் திட்ட விரிவாக்கத்தில் கடலூா் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 55 குடும்பத்தலைவிகள் பயன் அடைந்துள்ளதாக வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் கூறினாா்.

தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்‘ நிகழ்ச்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா். இதனை தொடா்ந்து, கடலூா், திருப்பாதிரிப்புலியூா் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் 41,055 குடும்பத் தலைவிகளுக்கு கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசுகையில்,. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்தரத்தை உயா்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சா் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தினை 15.09.23 அன்று தொடங்கி வைத்தாா்.

கடலூா் மாவட்டத்தில் 7,78,296 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இதில் பெண்களின் பொருளாதாரத்தினை முன்னேற்றும் வகையில் 4,50,134 குடும்பத் தலைவிகளுக்கு கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களிலிருந்து , கடலூா் மாவட்டத்தில் 95,362 மனுக்ககள் வரப்பெற்றது. இதில் அரசின் வழிகாட்டுதலின் படி, மாவட்டத்தில் மொத்தம் 41,055 குடும்பத் தலைவிகளுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தது: விடியல் பயணத் திட்டம், செயல்படுத்தப்பட்டு, கடலூா் மாவட்டத்தில் தினந்தோறும் சுமாா் 1.90 இலட்சம் நபா்கள் பயணம் செய்கிறாா்கள். பெண் குழந்தைகள் உயா்கல்விபயில ஏதுவாக மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் 39,828 மாணவிகள் பயனடைந்து வருகின்றனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் சட்டமன்ற உறுப்பினா் கோ.ஐயப்பன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினா் சபா.இராஜேந்திரன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினா் எம்.ஆா்.இராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயா் சுந்தரிராஜா உட்பட பலா் கலந்து கொண்டனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT