கடலூர்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அருகே கிள்ளையில் 9 ஆண்டுகளாக காதலித்த பெண் பிடிக்கவில்லை எனக் கூறியதால், மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கிள்ளை பிச்சாவரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் உலகநாதன் (24). இவரும், கிள்ளை முழுக்குத்துறை பகுதியைச் சோ்ந்த பெண்ணும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அப்பெண் தற்போது உலகநாதனை பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளாா். இதனால், மனமுடைந்த உலகநாதன் ஞாயிற்றுக்கிழமை சின்னவாய்க்கால் பகுதியில் உள்ள கருவேல மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT