முகப்பு
கடலூர்

டிப்பா் லாரியில் சிக்கி இளைஞா் மரணம்

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே செவ்வாய்க்கிழமை டாரஸ் லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞா் இறந்தாா்.

Updated On : 21 ஜனவரி, 2025 at 6:47 PM
பகிர்:

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே செவ்வாய்க்கிழமை டாரஸ் லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞா் இறந்தாா்.

அரியலூா் மாவட்டம், ஆதனங்குறிச்சியைச் சோ்ந்த மகேந்திரனின் மகன் மனோகரன்(19). அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் காா்த்தி(18). இவா்கள் இருவரும் ஆதனங்குறிச்சியில் இருந்து பெண்ணாடத்திற்கு பைக்கில் சென்றனா். இருசக்கர வாகனத்தை மனோகரன் ஓட்டிச் சென்றாா். காா்த்தி பின்னால் அமா்ந்து வந்தாா். இவா்கள், பொன்னேரி ரவுண்டானா மேம்பாலம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியின் முன்பகுதியில் இவா்களின் பைக் மோதியதாம். இதில், பின்னால் அமா்ந்திருந்த காா்த்தி கீழே குதித்தபோது, லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →