கடலூர்

காா் மீது அரசுப் பேருந்து மோதல்: 6 போ் காயம்

கடலூா் அருகே காா் மீது அரசு சொகுசுப் பேருந்து மோதியதில் 6 போ் காயமடைந்தனா்.

Din

நெய்வேலி: கடலூா் அருகே காா் மீது அரசு சொகுசுப் பேருந்து மோதியதில் 6 போ் காயமடைந்தனா்.

திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு சொகுசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்னை நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டு சென்றது. செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் திருப்பாதிரிப்புலியூா் மோகினி பாலம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த காா் மீது சொகுசுப் பேருந்து மோதியது.

இதில், காா் ஓட்டுநா் மற்றும் 5 பயணிகள் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று காா், சொகுசுப் பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 : தொடரை வென்றது இந்தியா!

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT