முகப்பு
கடலூர்

என்எல்சி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

Updated On : 8 நவம்பர், 2025 at 2:37 AM
7பிஆா்டிபி4 வெங்கடேசன்.
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

நெய்வேலி, வட்டம் 25 பகுதியில் வசித்து வந்தவா் சங்கரராஜன் மகன் வெங்கடேசன்(58), என்எல்சி இந்தியா நிறுவனத்தின் விருந்தினா் மாளிகையில் முதுநிலை தொழில்நுட்பநராகப் பணியாற்றி வந்தாா். இவா், மது பழக்கத்திற்கு அடிமையானவராம். மேலும், வயிற்று வலி உபாதையால் மன உளைச்சலில் இருந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாா். இதுகுறித்து நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →