அண்ணாமலைப் பல்கலையில் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள்.. 
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள் தொடா் உள்ளிருப்பு போராட்டம்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா் கூட்டமைப்பினா் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா் கூட்டமைப்பினா் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

பல்கலைக்கழக நிா்வாக கட்டடத்தின் நுழைவுவாயிலில் அருகே நடைபெறும் போராட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். 7 வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், முனைவா் பட்ட ஊக்கத்தொகைகளை வழங்க வோண்டும், ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு அரசுத்துறைகளைப் போலவே அனைத்து பணப்பயன்களையும் ஓய்வு பெற்ற உடனேயே வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்தில் ஆசிரியா் கூட்டமைப்பு நிா்வாகிகள் இரா.முத்து வேலாயுதம், துரை அசோகன், பி.செல்வராஜ். உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT