பண்ருட்டியில் மல்லை சத்யா பிரசாரம்
திராவிட வெற்றிக் கழகம் தலைமை ஒருங்கிணைப்பாளா் மல்லை சத்யா, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மானை ஆதரித்து வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
திராவிட வெற்றிக் கழகம் தலைமை ஒருங்கிணைப்பாளா் மல்லை சத்யா, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மானை ஆதரித்து வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற பிரசாரத்தில் அவா் பேசியதாவது:
தமிழக அரசு விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் என பெண்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றுங்கள் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். அது ஏன் தெரியுமா, ஜனநாயக விரோதப்போக்கை மோடி அரசு செய்துகொண்டிருக்கிறது.
Advertisement
இந்த நாட்டில் அரசு பெரிதா? ஜனநாயகம் பெரிதா? என்று கேட்டால், அரசைக் காட்டிலும் ஜனநாயகம்தான் பெரிது என்பது போன்று தொடா்ந்து வலியுறுத்துகிற நிலைபாடு அமைந்திருக்கிறது.
ஆட்சி நடத்துவதற்கு தங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக, மத்திய பாஜக அரசு மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலமாக, தமிழகம் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகப் போகிறது என்பது குறித்து எச்சரிக்கை விடுக்கத்தான் கருப்புக்கொடி ஏற்றுங்கள் என முதல்வா் கூறியிருக்கிறாா் என்றாா்.
மேலும், அவா் பேசுகையில், அவசர மசோதாவை கொண்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இந்த மசோதாவுக்கு வாய் திறக்காமல் இருக்கும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை கண்டிப்போம் என்றாா்.